/* ===== Custom Header + Mobile Responsive for Watermark ===== */ #header-inner { text-align: center !important; padding: 10px 0 !important; } #header h1, #header h1 a { font-size: 32px !important; color: #004080 !important; text-decoration: none !important; font-weight: bold !important; } #header .description { font-size: 16px !important; color: #333333 !important; font-style: italic !important; } /* Mobile view */ @media only screen and (max-width: 600px) { #header h1, #header h1 a { font-size: 22px !important; } #header .description { font-size: 14px !important; } .post { background: #ffffff !important; margin: 10px 5px !important; padding: 10px !important; border-radius: 8px !important; } img { max-width: 100% !important; height: auto !important; } }

Friday, 17 October 2025

மருத்துவ குணம் கொண்ட அதிமதுரம்.

 

🫚அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.
சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.
அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது
புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.
பொதுவாக அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக். அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.
தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.
வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை ‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்

Tuesday, 14 October 2025

திருக்கோணமலை – வரலாறும் சிறப்பும்

 

🕉️ திருக்கோணமலையின் வரலாறும் இராவணன் வெட்டின் அதிசயமும்

📍இடம் மற்றும் இயற்கை அமைப்பு

திருக்கோணமலை இலங்கையின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கியமான துறைமுக நகரம்.
இயற்கை அழகு, கடல் வளம், பண்டைய வரலாறு, ஆன்மீகம் – இவற்றை எல்லாம் ஒன்றாகக் கொண்டுள்ள புனித தலம் இதுவாகும்.
“திரு + கோணம் + மலை” என்ற சொல்லிலிருந்து வந்த பெயர் இதன் புனிதத்தையும் அமைப்பையும் விளக்குகிறது.


🕉️ கோணேஸ்வரர் ஆலயத்தின் தெய்வீக வரலாறு

திருக்கோணமலையின் புகழ் பெரும்பாலும் கோணேஸ்வரர் சிவன் ஆலயம் காரணமாகவே உலகம் அறிந்தது.
இந்த ஆலயம் இலங்கையின் மிகப் பழமையான சிவாலயங்களில் ஒன்று;
சிவபெருமான் இங்கு “கோணேஸ்வரர்” எனவும், அம்பாள் “மாதுமை அம்பாள்” எனவும் வழிபடப்படுகிறார்.

இது இலங்கையின் ஐந்து ஈஸ்வரத் தலங்களில் (Panch Eswaram) ஒன்றாகும்.
மற்ற நான்கு தலங்கள்:

  • நகுலேஸ்வரம் (கேசபே)

  • கேதீஸ்வரம் (மன்னார்)

  • முன்னேஸ்வரம் (புத்தளம்)

  • தேவேஸ்வரம் (தேவுந்தரா)


⚔️ இராவணன் வெட்டு – புராணக் கதை பேசும் பாறை

கோணேஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் கடலை நோக்கி ஒரு உயர்ந்த பாறை உள்ளது; அதையே இராவணன் வெட்டு (Ravana’s Cut) என அழைக்கின்றனர்.

புராணக் கதைகளின்படி, இராவணன் சிவபெருமானின் தீவிர பக்தர்.
அவர் இந்த திருக்கோணமலை மலைப்பகுதியைத் தன் இராச்யத்துக்குக் கொண்டு செல்ல முயன்றபோது, சிவபெருமான் அதைத் தடுத்ததாக கூறப்படுகிறது.
அதனால் இராவணன் கோபத்தில் தனது வாளால் அந்தப் பாறையை வெட்டினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வெட்டின் சுவடுகள் இன்றும் அந்த பாறையில் தெளிவாகக் காணப்படுகின்றன.

அந்த இடம் கடலை நேரடியாக நோக்கியுள்ளதால், அங்கிருந்து பார்க்கும் கடல்காட்சி மிக அற்புதமானது.
இது இயற்கை அழகும், புராண நம்பிக்கையும் இணைந்த ஒரு மாயமான இடமாக விளங்குகிறது.


🏰 வரலாற்று முக்கியத்துவம்

திருக்கோணமலை பல நூற்றாண்டுகளாகவே ஒரு முக்கிய வணிக மற்றும் கடற்படை தளம்.
சோழர், பாண்டியர், தமிழரசர்கள் இந்தியா–இலங்கை வணிகம் மேற்கொள்ள இதை பயன்படுத்தினர்.
பின்னர் போர்த்துகீசர், டச்சு, ஆங்கிலேயர் ஆகியோர் தங்கள் ஆட்சிக்காலங்களில் இதனை கடல்சார் தளமாக வைத்தனர்.

1622ஆம் ஆண்டு போர்த்துகீசர் கோணேஸ்வரர் ஆலயத்தை இடித்தனர்.
அதில் இருந்த சிலைகள் கடலில் வீசப்பட்டன.
பின்னர் அவை மீண்டும் கண்டெடுக்கப்பட்டு இன்றைய ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ளன.


🌊 கடலும் இயற்கையும்

திருக்கோணமலை கடற்கரை இலங்கையின் அழகிய கடற்கரைகளில் ஒன்று.
வெண்மணல், நீல கடல், பாறைகள், பவளப்பாறைகள் – இவை அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து கடலை நோக்கி பார்க்கும் அனுபவம் மனதை அமைதிப்படுத்தும்.

அங்கு உள்ள “லவேர்ஸ் லீப் (Lovers Leap)” என்ற பாறை,
பழமையான காதல் வரலாற்றைச் சொல்லும் இடமாகவும் புகழ்பெற்றது.


🕊️ பலமத கலாச்சாரம்

திருக்கோணமாலை நகரம் பலமதங்களும் பல இனங்களும் இணைந்த ஒற்றுமையின் நகரம்.
இங்கு இந்துக்கள், புத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் வாழ்கின்றனர்.
தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் பரவலாகப் பேசப்படுகின்றன.


🌺 இன்றைய திருக்கோணமலை

இன்றைய திருக்கோணமலை ஒரு சுற்றுலா மையம், கல்வி மையம் மற்றும் ஆன்மீகத் தலம் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்த நகரம்.
பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடற்கரை, ஆலயம், இராவணன் வெட்டு, கடல்சுற்றுப்பயணம் போன்றவற்றிற்காக வருகிறார்கள்.


🕉️ முடிவு

திருக்கோணமலை — வரலாறும் புராணமும் கலந்து நிற்கும் புனித நிலம்.
கோணேஸ்வரர் ஆலய மணி ஒலியும், கடலின் அலை சத்தமும் இணைந்து மனதில் அமைதியை உருவாக்குகின்றன.
அங்கு நிற்கும் இராவணன் வெட்டு பாறை, அந்தப் பகுதியின் தெய்வீகமும் வரலாற்றுப் பெருமையும் வெளிப்படுத்தும் சான்றாக இன்று வரை நிற்கிறது.

Monday, 13 October 2025

நெதர்லாந்து



மக்கள் தொகையைவிட சைக்கிள்கள் அதிகம் இருக்கும் நாடு . 
ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதியில் பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளை ஒட்டி அமைந்துள்ள நாடு நெதர்லாந்து. இந்த நாட்டு மக்களின் பிரதான மொழி டச்சு. ஆம்ஸ்டர்டாம், ரோட்டர்டாம், தி ஹேக் (இதனை டச்சு மொழியில் டென் ஹாக் என்கிறார்கள்) ஆகியவை இந்த நாட்டின் முக்கியமான நகரங்கள். நாட்டின் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம். இது ஒரு பெரிய துறைமுக நகரம். ரோட்டர்டாம் ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம். நாட்டின் பாராளுமன்றம் இருப்பது தி ஹேக் நகரத்தில். ஆம்ஸ்டர்டாம் நகரத்துக்கு வயது 750. இந்த ஆண்டு அக்டோபரில் இதனைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறது ஆம்ஸ்டர்டாம் நகரம்.
பல நூற்றாண்டுக் கால வரலாறு கொண்ட இந்த நகரத்துக்கு ஆம்ஸ்டர்டாம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? இந்த நகரத்தின் வழியாக ஆறு ஒன்று ஓடுகிறது. அதன் பெயர் ஆம்ஸ்டெல். அந்த ஆற்றின் மீது 1270-ல் அணையைக் கட்டினார்கள். அதாவது, ஆம்ஸ்டெல் ஆற்றின் மீது கட்டப்பட்ட டேம். அதுதான் ஆம்ஸ்டர்டாம். நகரின் டூரிஸ்ட் கைடுகள் எல்லோரும் இந்தத் தகவல் சுற்றுலாப் பயணிகளுக்குச் சொல்கிறார்கள். ஆனாலும், அதற்கு முன்பே ஆம்ஸ்டெல் ஆற்றை ஒட்டி மக்கள் வசித்த பகுதி இதே பெயரில்தான் அழைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஆக, பதின்மூன்றாம் நூற்றாண்டில் மீனவ கிராமமாக இருந்த இடம்தான் இன்று நாம் காணும் ஆம்ஸ்டர்டாம் என்ற சர்வதேசப் பெருநகரமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
இங்கே, 170 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். ஆண்டுக்கு 1.14 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். இவர்களில் 45 லட்சம் பேர் மட்டுமே உள்நாட்டு டச்சு டூரிஸ்ட்டுகள். மீதி 95 லட்சம் பேர் அயல்நாட்டுச் சுற்றுலாப்பயணிகள். இது ஆம்ஸ்டர்டாமின் மக்கள் தொகையைவிட பல மடங்கு அதிகம்.
ஆம்ஸ்டர்டாமில் வீடுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. அந்தக் காலத்துத் திருவல்லிக்கேணி வீடுகள் போல வீடுகளின் சுவர்கள் ஒன்றோடொன்று ஒட்டியே இருக்கும். அதைவிட சுவாரசியமான விஷயம், வீடுகளின் நுழைவுப் பகுதி மிகவும் குறுகலாகவும், உள்ளே மிக
நீ...ள...மாகவும் போய்க்கொண்டே இருக்கும். அதற்கும் ஒரு பின்னணி உண்டு. அந்தக் காலத்தில் ஒரு வீட்டின் முன்பகுதி எவ்வளவு அகலம் என்பதை வைத்துதான் வீடுகளுக்கு வரி வசூல் செய்யப்பட்டதாம். எனவே, முகப்பு குறுகியதாகவும், உட்புறம் நீண்டும் இருக்கும்படி வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், எல்லா வீடுகளும் மூன்று, நான்கு மாடிகள் வரை கட்டப்பட்டுள்ளன. உபரியாக பேஸ்மென்ட்டும் உண்டு. வீடுகள் அகலக் குறைவு என்பதால், மாடிப்படிகளுக்கு இடப்பற்றாக்குறை. எனவே, பெரும்பாலும் ஸ்பைரல் படிகள்தான்.
ஆம்ஸ்டர்டாமை `மியூசியங்களின் சொர்க்கம்' என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தெருவுக்குத் தெரு மியூசியங்கள். சின்ன வயசில் பத்திரிகைகளில் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்று படித்திருக்கிறோம் இல்லையா? அந்த ரிப்ளியின் `நம்பினால் நம்புங்கள்' சமாச்சாரங்களைக் கொண்ட ஒரு மியூசியமும் இங்கு உள்ளது. புகழ்பெற்ற மேடம் டூசாத் மெழுகுச் சிலை மியூசியமும் உள்ளது. வான் கா, ராம்பிராண்டு போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுக்கென்றே பிரமாண்டமான மியூசியங்களும் இருக்கின்றன. அங்கே இந்த ஓவியர்களின் பல ஒரிஜினல் ஓவியங்கள் பார்வைக்கு உள்ளன. இவற்றைத் தவிர, சயின்ஸ் மியூசியம், டங்கன் என்று பண்டைய கொடூரங்கள் உள்ளிட்ட பயங்கரங்கள் மூலம் ஆளை மிரட்டும் மியூசியம், படகு வீடு மியூசியம், யூத வரலாற்று மியூசியம், பழைமையான ரைக்ஸ் மியூசியம், பைபிள் மியூசியம், கம்ப்யூட்டர் மியூசியம், டயமண்ட் மியூசியம், திரைப்பட மியூசியம், புகைப்பட மியூசியம், கால்வாய்கள் மியூசியம், காஸ்ட்யூம் மியூசியம், மரண மியூசியம், துலீப் மலர் மியூசியம், ஆன் ஃப்ரங்க் இல்லம் என்று ஏகப்பட்ட மியூசியங்கள். அவ்வளவு ஏன்? போர்னோகிராபி, எரோடிகா போன்ற சமாச்சாரங்கள் அடங்கிய ஒரு செக்ஸ் மியூசியம், ஆம்ஸ்டர்டாமில் பிரசித்தி பெற்ற பாலியல் தொழில் குறித்த மியூசியம்கூட இங்கு உண்டு.
இன்னொரு முக்கியமான விஷயம். ஆம்ஸ்டர்டாமில் மைல்டு ரக போதை வஸ்துகளுக்கு அனுமதி உண்டு. காபி ஷாப்களிலேயே அவற்றை எளிதாக வாங்கலாம். அதேபோல, சிவப்பு விளக்குப் பகுதியும் உண்டு. அங்கே பகலிலும், அதைவிட ஜரூராக இரவிலும் சட்டபூர்வமாக பாலியல் தொழில் நடக்கிறது. பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளையும் நகர நிர்வாகம் வகுத்திருக்கிறது.
நடந்தே நகரத்தைச் சுற்றிக் காட்டும் வாக்கிங் டூரின்போது டூர் கைடு என்னிடம் ஒரு தகவலைச் சொன்னார். ``ஆம்ஸ்டர்டாம் நகரின் நெரிசல் மிகுந்த மூன்று முக்கிய ஏரியாக்களில் இப்போது சிவப்பு விளக்குப் பகுதிகள் இயங்கிவருகின்றன. இவற்றை நகருக்கு வெளியில் ஒரே இடத்தில் இடம் மாற்றப் போவதாக தற்போதைய நகர மேயர் சொல்லியிருக்கிறார். அதற்கு பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.”

ஆம்ஸ்டர்டாம் நகரத்து மத்திய ரயில் நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் உள்ளது டாம் ஸ்கொயர் என்ற இடம். நகரின் மிக முக்கியமான இடம் இதுதான். டாம் ஸ்கொயரை ஒட்டி ஒரு பெரிய கட்டடம், அதனை ராயல் பேலஸ் என்று அழைக்கிறார்கள். ஆனால், அங்கே ராஜ குடும்பத்தினர் யாரும் இப்போது வசிக்கவில்லை. அரசாங்கத்தின் சில முக்கியக் கூட்டங்கள் அங்கே நடக்குமாம். நெப்போலியன் ஹாலந்தைக் கைப்பற்றியதும், இந்தப் பகுதியை ஆள்வதற்குத் தன் தம்பி லூயிஸ் போனபார்ட்டை அனுப்பி வைத்தாராம். அந்த லூயிஸ் இந்த அரண்மனையில் தங்கியதால், அதற்கு ராயல் பேலஸ் என்று பெயர் வந்தது.
இந்த டாம் ஸ்கொயரிலேயே பார்த்து ரசிக்க நிறைய உண்டு. சில இசைக்கலைஞர்கள் மெய் மறந்து ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருப்பார்கள். எதிரே ஒரு தொப்பி வைக்கப்பட்டிருக்கும். சிறிது நேரம் இசையைக் கேட்டு ரசித்துவிட்டு, தொப்பியில் கொஞ்சம் சில்லறைகள் போட்டுவிட்டுப் போகிறார்கள் பார்வையாளர்கள். பக்கத்திலேயே ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாகசம் பண்ணுவார் இன்னொருவர். அருகிலேயே குழந்தைகள் தரையில் உட்கார்ந்துகொண்டு பொம்மலாட்டம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைகள் குதூகலமாக பொம்மலாட்டத்தை ரசிக்க, அந்த நிகழ்ச்சி முடியும் வரை பெற்றோர்கள் பொறுமையோடு அங்கே காத்திருப்பார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன், குழந்தைகளுக்கு சோகம்; பெற்றோர்கள் முகத்தில் மலர்ச்சி!
இதைவிட சுவாரசியமான ஒரு விஷயம், வேஷம் கட்டிய மனிதர்கள். காலை முதல் மாலை வரை ஏதாவது ஒரு வேஷம் போட்டுக் கொண்டு, ஒரே இடத்தில் அசையாமல் நின்றுகொண்டிருப்பார்கள். இவர்களில்தான் எத்தனை ரகம்! டிராகுலா போல, எலும்புக்கூடு போல, மகாராணி போல, சிக்கனமாக உள்ளாடைகள் அணிந்துகொண்டு, உடம்பு முழுக்க பல வண்ணப் பெயின்ட்கள் பூசிக்கொண்டு நிற்பவர்களையும்கூடக் காணலாம். சுற்றுலாப்பயணிகள் அவர்களோடு சேர்ந்து நின்றுகொண்டு போட்டோ எடுத்துக் கொள்வார்கள். சும்மா இல்லை, அவர்களுக்குக் காசு கொடுக்க வேண்டும்.
அங்கே எந்த நேரமும் ஜனங்களையும், புறாக்களையும் ஒருசேரக் காணலாம். புறாக்கூட்டத்துக்கு மத்தியில் கைகள் மேல், தோளில், தலையில் புறாக்கள் உட்கார்ந்திருக்க போட்டோ எடுத்துக்கொள்வது இங்கே மிகப் பிரபலம். இரண்டு பேர் கையில் ஒரு பையுடன் நிற்கிறார்கள். பையில் அரிசி. ஒரு கை அரிசியை உங்கள் கையில் கொடுத்ததும், அதைப் புறாக்களுக்கு நீங்கள் போடும்போது அவை உங்களை நெருங்கி, உங்கள் கையில், தலையில், தோளில் ஜம்மென்று உட்கார்ந்துகொள்ளும். அப்படியே கிளிக்கிக் கொள்ள வேண்டியதுதான். அரிசிக்காரருக்கு இஷ்டம் போல டிப்ஸ் கொடுத்துவிட்டு நகரலாம். அரிசியை உச்சந்தலையில் தூவிக்கொண்டு புறாக்களைத் தலைக்கே வரவழைத்து போட்டோ எடுத்துக் கொள்பவர்களும் உண்டு.
டாம்ஸ்கொயர் ஒரு பொழுதுபோக்குக் களம் மட்டுமல்ல, ஒரு போராட்டக் களமும் கூட! சனி ஞாயிறு என்றால், சிலர் குழுக்களாக வந்து பேனர்கள் வைத்து, தங்கள் பிரச்னைகள் பற்றி விளக்குவார்கள். துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பார்கள். நான் ஒரு சீனக் குழுவினரை சந்தித்தேன். சீனாவில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்வது கனஜோராக நடந்து கொண்டிருக்கிறதாம். சீனர்கள் குழு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் டாம்ஸ்கொயரில் கூடி, இது பற்றிய துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து, மனித உறுப்பு விற்பனைக்கு எதிராகக் கையெழுத்து பெறுகிறார்கள். இன்னொரு பக்கம், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் தங்கள் பிரச்னைக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். அங்கே பார்த்தால் கடுமையான அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்புப் பிரசார பேனர்கள்; அதற்கு சற்றுத் தள்ளி சில யூதர்கள் `தீவிரவாதத்தை முறியடிப்போம்' என்று பாலஸ்தீன தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பிரசாரங்களும் டாம்ஸ்கொயரில் ஒரே இடத்தில் நடக்கின்றன.
ஒரு குழுவினரிடம், “இங்கே யாரும் தம் இஷ்டப்படி போராட்டம், பிரசாரம் செய்யலாமா?'' என்று கேட்டேன். “நாங்கள் முறைப்படி அரசாங்க அனுமதி பெற்றிருக்கிறோம்'' என்றார் அவர். வாழ்க ஜனநாயகம்! வாழ்க பேச்சுரிமை!

Sunday, 12 October 2025

Old is Gold

நிலவே என்னிடம் நெருங்காதே 

ஒருநாள் இரவு பகல் போல் நிலவு         படம்  காவிய தலைவி 

மன்னவனே அழலாமா                               படம்   கற்பகம் 

நினைக்க தெரிந்த மனமே                       படம்   ஆனந்தஜோதி 

நாளை இந்த வேளை                                    படம்    உயர்ந்த மனிதன் 

கண்ணா கருமை நிற கண்ணா            படம்   நானும் ஒரு பெண்  

 ஆயிரம் பெண்மை                                       படம்  வாழ்க்கைப்படகு

கண்கள் எங்கே                                               படம்    கர்ணன்

கொஞ்சி கொஞ்சி பேசி                              படம்  கைதி கண்ணாயிரம்)

சந்திப்போமா இனி சந்திப்போமா        படம்       சித்தி

பார்த்த ஞாபகம் இல்லையோ                 படம்  புதிய பறவை 

காதோடுதன் நான் பாடுவேன்                 படம் 

சிரித்தாலும் அழுதாலும் நிலை              படம்    களத்தூர் கண்ணம்மா

வருந்தாதே மனமே வீணே                         படம்  போட்டர்  கந்தன்

Sunday, 5 October 2025

எனக்கு பிடித்த பாடல்கள்

 நானாக நானில்லை தாயே.                    படம் சகலகலாவல்லவன் 

முன்பனியா முதல்மழையா                    படம் நந்தா 

பாடு நிலாவே                                                   படம் உதயகீதம் 

பூங்காற்றிலே உன்சுவாசத்தை              படம் உயிரே 

ஆயிரம் மலர்களே மலருங்கள்               படம்  நிறம் மாறாத பூக்கள் 

அகரம் இப்போ சிகரம் ஆச்சு                  படம்  சிகரம்

நீ கவிதைகளா                                                 படம்   மரகத நாணயம் 

எனக்கு பிடித்த பாடல் அது                       படம்   ஜூலி கணபதி 

பூக்கள் பூக்கும் தருணம்                             படம்   மதராசபட்டினம் 

உயிரே உயிரே வந்து                                    படம்    பம்பாய் 

ஆருயிரே ஆருயிரே                                    படம்   மதராசபட்டினம் 

விக்ரம் விக்ரம் விக்ரம்                                  படம்   விக்ரம் 







ஏழாலை

 




ஏழாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் தெல்லிப்பழைகட்டுவன்குப்பிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் குப்பிளான்புன்னாலைக்கட்டுவன் ஆகிய ஊர்களும், தெற்கில் சுன்னாகம்ஊரெழு ஆகிய ஊர்களும், மேற்கில் மல்லாகமும், உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்களில் ஒன்றான இவ்வூர் ஏழாலை வடக்கு, ஏழாலை மேற்கு, ஏழாலை கிழக்கு, ஏழாலை தெற்கு, ஏழாலை மத்தி, ஏழாலை தெற்மேற்கு என ஆறு கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆலயங்கள்

ஏழாலையில் ஏழு ஆலயங்கள் இருந்ததனால் ஏழாலை எனப் பெயர் ஏற்பட்டதாக மக்கள் கருதுகின்றனர். இவ் ஏழு ஆலயங்களைப் பற்றிய விபரங்களைப் பின்வருமாறு காணலாம்:

  1. ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலயம்
  2. ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலயம்
  3. ஏழாலை புங்கடி அம்பலவாணேஸ்வரர் ஆலயம்
  4. ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்மன் ஆலயம் (இது முன்னர் "அத்தியடி புவனேஸ்வரி அம்மன் ஆலயம்" என்று அழைக்கப்பட்டிருந்தது
  5. ஏழாலை பெரியதம்பிரான் கோவில் (ஏழாலை மத்தி)


ஆனால் இவ்வாலயங்களைத் தவிர ஏனைய சிறு ஆலயங்களும் மற்றும் கத்தோலிக்க ஆலயங்களும் இவ்வூரில் உள்ளன.

யாழ்ப்பாணத்தின் கல்வி, கலாசாரம், ஆன்மீக மையம்

📍 இடம் மற்றும் இயற்கை அழகு

எழாலை, இலங்கையின் வடக்கு மாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், தோட்டங்கள், குளிர்ச்சியான சூழல் ஆகியவை இக்கிராமத்தின் இயற்கை அழகை உயர்த்துகின்றன. விவசாயம், குறிப்பாக காய்கறி சாகுபடிகள், மக்கள் வாழ்வின் அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன.

🛕 ஆலயங்கள் மற்றும் ஆன்மீக வாழ்க்கை

எழாலை, யாழ்ப்பாணத்தில் ஆன்மீக மற்றும் மதச் சிறப்புக்குப் பெயர்பெற்ற இடமாகும். இங்குள்ள கோவில்கள் சமூகத்தை ஒன்றிணைக்கும் முக்கிய பங்காற்றுகின்றன.

   1. ஏழாலை மேற்கு கருணாகரப்பிள்ளையர் மடாலயம். 1910 களில்                   சடைவரத சுவாமிகளின் ஆசியுடன் சித்த வைத்தியர் ஐயம்பிள்ளை               பொன்னையா அவர்கள் ஸ்தாபித்தார்.

   2. எழாலை முருகன் கோவில் – மிகவும் புகழ்பெற்ற திருத்தலம்; வருடாந்திர        திருவிழாக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கின்றன.

    3. எழாலை நாகதம்பிரான் கோவில் – பாரம்பரிய சடங்குகள், தெய்வ                   நம்பிக்கைகள், பழங்கால வரலாற்றை தாங்கி நிற்கிறது.

    4. சித்தர் ஆலயம் மற்றும் பிற சிறு கோவில்கள் – மக்கள் நம்பிக்கை,                   ஆன்மிக மரபுகள், கிராம ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்குகின்றன.

🎓 கல்வி மற்றும் கல்விமான்கள்

எழாலை, கல்வி மரபில் சிறப்பிடம் பெற்ற கிராமம். பல கல்விமான்கள் இங்கிருந்து உருவாகி, யாழ்ப்பாணத்தின் அறிவுச்சுடராக விளங்கினர்.

  1. எழாலை மகா வித்தியாலயம்  இங்கு கல்வி பெற்ற மாணவர்கள் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
  2. கல்வியை முன்னிறுத்திய அறிஞர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், சட்டவாதிகள் என பலர் எழாலையின் பெருமையை உலகளவில் கொண்டு சென்றுள்ளனர்.

🎭 பண்பாடு மற்றும் பாரம்பரியம்

எழாலை கிராமம் தமிழர் பண்பாட்டு மரபில் ஆழமாகப் பதிந்துள்ளது.

  1. கோவில் திருவிழாக்கள், இசை, நடனம், வாத்தியக் கலைகள் மக்கள் வாழ்வின் அங்கமாக இருக்கின்றன.
  2. பாரம்பரிய மதச்சடங்குகள், குடும்ப ஒற்றுமை, சமூக விழாக்கள் கிராமத்தின் அடையாளமாக உள்ளன.

📜 வரலாற்று மற்றும் சமூக முக்கியத்துவம்

பழங்காலத்திலிருந்தே எழாலை, கல்வி, மதம், விவசாயம் ஆகியவற்றின் மையமாக திகழ்ந்து வந்துள்ளது. போர், இடம்பெயர்வு போன்ற சவால்களை எதிர்கொண்டாலும், மக்கள் தங்களின் கடின உழைப்பாலும் ஒற்றுமையாலும் மீண்டும் எழுந்து நிற்கின்றனர்.

🌱 இன்றைய எழாலை

இன்றைய எழாலை, பாரம்பரியத்தையும் நவீன வளர்ச்சியையும் இணைத்து முன்னேறி வருகிறது.

  1. வெளிநாடுகளில் வாழும் எழாலையர்கள் தங்களின் கிராம முன்னேற்றத்தில் பங்காற்றுகின்றனர்.
  2. கல்வி, விவசாயம், தொழில், ஆன்மிகம் ஆகிய துறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது.

எழாலை என்பது ஒரு சாதாரண கிராமம் அல்ல; அது அறிவின் நிலம், ஆன்மீகத்தின் மையம், பண்பாட்டு செழிப்பின் சின்னம். கல்விமான்கள், ஆலயங்கள், பாரம்பரிய விழாக்கள் அனைத்தும் எழாலையின் பெருமையை உலகளவில் பரப்பி வருகின்றன.

https://www.youtube.com/watch?v=45o8Tt2oZAU

https://www.youtube.com/watch?v=XmceK1ZHamE

https://www.youtube.com/watch?v=q-mFPgvxfEk

https://www.youtube.com/watch?v=qs5Iws2j70I

வீணாகிறதே என்று சாப்பிட்டால் வீணாகிவிடும் நம் உடம்பு !!

 



பொதுவாக, வீட்டில் மீதமாகும் உணவுகளை எல்லாம் ‘அய்யோ.. காசு போட்டு வாங்கி, கஷ்டப்பட்டு சமைச்சு, எல்லாம் வீணாப்போகுதே..’ என்பதற்காகவே சாப்பிடும் பெண்கள் இங்கு பலர். ‘‘அப்படி வீட்டினர் வீணாக்கும் உணவுகளை, வீணாக்காமல் சாப்பிடுவதாக எண்ணி தேவைக்கும் அதிகமாகச் சாப்பிடுவதால் அது உங்கள் உடம்புக்குச் செய்யும் கெடுதல்கள் பல!’’ .

ஊட்டச்சத்து அதிகமானால்.. ஊளைச்சதை!

‘‘ஊட்டச்சத்துகளை பொதுவாக மைக்ரோ மற்றும் மேக்ரோ என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில் எந்த வகையை அதிகமாக உட்கொண்டாலும், பக்கவிளைவுகள் பரிசாகக் கிடைக்கும்.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை மேக்ரோ ஊட்டச்சத்துகள். வீட்டில் மீதமாகும் உணவுகளில் முதல் இடம் பிடிப்பது, சாதம் மற்றும் அரிசி சார்ந்த உணவுகள்தான்.

கார்போஹைட்ரேட் உணவுகளான இவற்றை தேவைக்கும் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், உடலின் தேவைக்கும் அதிகமான கார்போஹைட்ரேட் கொழுப்பாக உடலில் சேர்ந்துக்கொண்டே இருக்கும். இன்னொருபுறம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகமாகிக்கொண்டே போய் சர்க்கரை நோயில் முடியும்.

ஒரு நாளில் கல்லீரலில் 400 கிராம் வரைதான் கார்போஹைட்ரேட் சேர வேண்டும். அதற்கும் அதிகமாக சேரும்போது அது கொழுப்பாக மாறி, `ஒபிசிட்டி’யை ஏற்படுத்தும். இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

ஃப்ரிட்ஜில் உணவுகள் கொண்டுவரும் பிரச்னைகள்!

ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் தவறு. ஜில் உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும்போது, அதிலுள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துகள் வெளியேறிவிடும். மேலும், ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகளவு கூடிவிடும். இப்படியான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது ஒபிசிட்டி, இதயநோய் என்று விளைவுகள் தீவிரமாக இருக்கும்.

காரக் குழம்பு வகைகளை மீண்டும் மீண்டும் சூடுசெய்து சாப்பிடும்போது அதில் இருக்கும் சோடியம் அளவு அதிகமாகி, ரத்தக்கொதிப்பை வரவழைக்கும்.

அசைவ உணவு வகைகளைச் சூடுசெய்து சாப்பிடும்போது, அதில் இருக்கும் கொழுப்புகள் எல்லாம் கெட்ட கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து உடற்பருமனுக்கு வழிவகுக்கும்.

பழங்களும் அளவாகவே..!

மைக்ரோ ஊட்டச்சத்து வகையில் விட்டமின் `ஏ’, `சி’, `இ’, `டி’, இரும்புச் சத்து போன்றவை அடங்கும். இந்தச் சத்துகள் எல்லாம் பழங்கள், கீரை வகைகள், தயிர், காய்கறிகள் போன்றவற்றில் அதிகம் உள்ளன. குழந்தை சாப்பிடவில்லை, மீதமாகிவிட்டது என ஏதோ ஒரு காரணத்தால் தேவையான அளவுக்கும் ‘எக்ஸ்ட்ரா’வாக இவற்றைச் சாப்பிடுவது அன்றாடம்தான்.

இவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது வாந்தி, மயங்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு தலைவலி, ஓய்வின்மை, பதற்றம் போன்ற உடனடிக் கோளாறுகளை உடலில் உண்டு பண்ணும். மைக்ரோ சத்துக்களை சமமாகச் சாப்பிடும் போதுதான், உடலில் மெட்டபாலிஸம் சரியாக இருக்கும்.

தொடர்ந்து ஒரே வகை பழம், காய் என்று அதிகளவில் சாப்பிடும்போது, இவற்றில் ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகமானால், உடலில் மற்ற சத்துகளை வேலை செய்ய விடாமலும், புதிதாக ஒரு பிரச்னையையும் உண்டுபண்ணி, ஒரு குறைபாடாக மாற்றிவிடும்.

உதாரணமாக, கால்சியம் சத்தை உடல் கிரகிக்க விட்டமின் `டி’ தேவை. ஆனால், கால்சியம் மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கால்சியமானது... விட்டமின் `டி’ தேவையை உடலில் ஈடுசெய்ய விடாது, அந்த நேரம் கால்சியமும் உடலில் தங்காது. இது புதிதாக ஒரு பிரச்னையை உண்டுபண்ணி, கால்சியம் குறைபாடாக மாற்றிவிடும்.நீர்ச்சத்து உணவுகளை அதிகளவு சாப்பிடும் போது அவை உடலில் தங்காமல், சிறுநீர் மூலம் வெளியேறிவிடும். எனினும், சிறுநீரகத்துக்கு அது அதிகப்படியான வேலையாக இருக்கும் என்பதால், தவிர்க்க வேண்டும்.

மனதளவிலும் பிரச்னைகள்..!

உடற்செயல்பாட்டுப் பிரச்னைகள் தவிரவும், மனதளவில் இது ஏற்படுத்தும் பிரச்னைகள் பல. உணவு வீணாவது பற்றிய கவலை முதலில் மனதை சோர்வுற வைக்கும். வீணாக்காமல் அதைச் சாப்பிட்ட பிறகு, தேவைக்கும் அதிகமாக உள்ளே தள்ளியதைப் பற்றிய எண்ணமும் உறுத்திக் கொண்டே இருக்கும்.

இதெல்லாம் மனரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்தும். அதேபோல, குடும்பம், குழந்தை, வேலைச்சுமை போன்ற காரணங்களால் பசிக்கும் நேரத்தில் சாப்பிடாமல் இருந்துவிட்டு, பசி அடங்கிய பிறகு வலுக்கட்டாயமாக சாப்பிடுவதும் கெடுதல்களையே தரும்.

இதற்கெல்லாம் சிம்பிள் தீர்வு..

வீணாகாத அளவுக்கு திட்டமிட்டுச் சமைப்பது. அப்படியே எதிர்பாராத காரணங்களால் உணவு மிகுந்து போனாலும், வீட்டில் வேலை பார்க்கும் பெண், தெருமுனையில் அமர்ந்திருக்கும் ஆதரவற்ற முதியவர் என்று தேவை இருப்பவர்களுக்கு அதைக் கொடுங்கள். அல்லது அதை எந்த மனச் சலனமும் இல்லாமல் குப்பையில் கொட்டுங்கள். ஏனெனில், வீணாகும் உணவைவிட, உங்கள் ஆரோக்கியம் முக்கியம். கிச்சனில் வேஸ்ட்டாவதைப் பற்றிக் கவலைப்பட்டு, மருத்துவச் செலவுகளை இழுத்துக் கொள்ளாதீர்கள்!’’.

Bremen

 



Bremen – ஜெர்மனியின் வரலாற்றும் நவீனத்தையும் இணைக்கும் சுற்றுலா இலக்கு

ஜெர்மனியின் வடக்கில், Weser ஆற்றின் கரையில் அழகாக திகழும் Bremen, வரலாறும் கலாச்சாரமும் இணைந்த நகரமாகும். ஜெர்மனியின் முக்கியமான சுதந்திர ஹான்சியாட்டிக் நகரங்களில் ஒன்றாகிய Bremen, இன்று சுற்றுலா பயணிகளுக்கு வரலாற்று சிறப்பும், நவீன அனுபவங்களும், இயற்கை அழகும், விளையாட்டு அதிர்வும் வழங்குகிறது.


செல்ல சிறந்த காலம்

  • வசந்த காலம் (ஏப்ரல் – ஜூன்): பூங்காக்கள் மலர்ச்சியால் அழகுறும் பருவம்.

  • இலையுதிர் (செப்டம்பர் – அக்டோபர்): வானிலை சீரானது, விழாக்கள் நடைபெறும் பருவம்.

  • குளிர்காலம் (டிசம்பர்): Bremen Christmas Market உலகப் புகழ் பெற்றது.


பார்வையிட வேண்டிய முக்கிய இடங்கள்

1. Bremen Town Hall (Rathaus)

யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாகிய இந்த நகர மன்றம், கோதிக் கட்டிடக்கலை மற்றும் ரெனசான்ஸ் பாணி இணைப்பை வெளிப்படுத்துகிறது.

2. Roland Statue

சுதந்திரத்தையும் நீதியையும் குறிக்கும் இந்தச் சிலை, Bremen நகரத்தின் பெருமை.

3. Bremen Town Musicians

Grimm சகோதரர்களின் கதை மூலம் புகழ்பெற்ற கழுதை, நாய், பூனை, சேவல் சிலை, சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்கும் பிரபல இடம்.

4. Schnoor Quarter

சிறிய தெருக்கள், வண்ணமயமான பழமையான வீடுகள், கைத்தொழில் கடைகள் மற்றும் கஃபேகளால் நிறைந்த பகுதி.

5. Universum Bremen

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு நவீன செயல்பாட்டு அறிவியல் அருங்காட்சியகம்.

6. Weser Stadion

விளையாட்டு ரசிகர்களுக்கு தவறாமல் பார்க்க வேண்டிய இடம். SV Werder Bremen கால்பந்து அணியின் தாயகம் இதுவே. Weser ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியம், சுமார் 42,000 பேரை கொண்டிருக்கக்கூடிய திறனைக் கொண்டது. போட்டி நாள்களில் நகரமே பச்சை நிறத்தில் ஒளிர்கிறது. ரசிகர்கள், ஸ்டேடியம் சுற்றுப்பயணம் (Stadium Tour) மற்றும் கிளப் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு அனுபவிக்கலாம்.


அனுபவிக்க வேண்டிய விழாக்கள்

  • Freimarkt: 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் ஜெர்மனியின் பழமையான மகிழ்ச்சி திருவிழா.

  • Bremen Music Festival: உலகத் தரம் வாய்ந்த சங்கீதக் கலைஞர்களை சந்திக்கச் சிறந்த வாய்ப்பு.

  • Christmas Market: குளிர்காலத்தில் சுவையான உணவுகள், அழகான அலங்காரங்கள், பண்டிகை உணர்வு.


சுவைக்க வேண்டிய உணவுகள்

  • Bremer Knipp: பாரம்பரிய உள்ளூர் உணவு வகை.

  • Labskaus: வட ஜெர்மனியின் பிரபல உணவு, உருளைக்கிழங்கு, இறைச்சி, முட்டை கலவை.

  • Beck’s Beer: உலகப் புகழ்பெற்ற பீர் பிராண்டான Beck’s, Bremen நகரத்தில் தயாரிக்கப்படுகிறது.


இயற்கை மற்றும் பசுமை

  • Bürgerpark: நகரின் பெரிய பசுமை பூங்கா, நடைபயிற்சி மற்றும் சைக்கிள் சவாரிக்கு சிறந்த இடம்.

  • Rhododendron Park: பல்வேறு மலர்கள் மற்றும் தாவரங்கள் கொண்ட அழகான தோட்டம்.

  • Weser ஆற்றங்கரை: நதிக்கரையில் நடைபயணம் அல்லது சிறிய கப்பல் சவாரி செய்ய வாய்ப்பு.


பயண குறிப்புகள்

  • பயணம்: நகரம் சிறியதாக இருப்பதால் நடைபயணம் மற்றும் சைக்கிள் சிறந்தது.

  • மொழி: ஜெர்மன் மொழி முக்கியம், ஆனால் ஆங்கிலமும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

  • போக்குவரத்து: Bremen Tram மற்றும் Bus வலையமைப்பு வசதியாக உள்ளது.


முடிவு

Bremen என்பது வரலாற்று சின்னங்கள், கலை, இசை, பசுமை சூழல், பீர் கலாச்சாரம் மற்றும் கால்பந்து அதிர்வை ஒருங்கிணைக்கும் நகரம். ஜெர்மனியில் பயணம் செய்யும் ஒருவர் கண்டிப்பாக தனது பயணப் பட்டியலில் Bremen-ஐ சேர்க்க வேண்டும்.

*நிலக்கடலை*

 






*டாக்டர்களின் எதிரி*
*நிலக்கடலை* 
*சக்கரையை கொல்லும்*
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

Ai என்பது என்ன..

 Ai என்பது என்ன..

இப்போதுதான் Ai பயன்படுத்த ஆரம்பித் திருக்கிறோம் என்பவர்கள், தங்களின் வாட்ஸ் அப் மூலமே அதைப் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்பில் சாட் பகுதியை ஓப்பன் செய்ததுமே மெட்டாவின் லோகோ இருக்கும். அதை க்ளிக் செய்தால் மெட்டா ஏஐ-யின் சாட் பக்கம் திறக்கும். அதில் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை நீங்கள் கேட்டுத் தெளிவு பெறலாம் அல்லது Chat GPT என்று Search செய்தால் Chat GPT-யின் சாட் பக்கம் திறக்கும்.

அதில் நீங்கள் உங்களுக்குத் தேவையான தகவல்களைக் கேட்கலாம். வாட்ஸ்அப் மூலம் பயன்படுத்துவதால் உங்களின் போன் ஸ்டோரேஜ் வீணாகாது. ஆரம்பநிலை பயனாளர்களுக்கு எளிதாகவும் இருக்கும். அவசியம் எனில் Play Store-ல் Chat GPT-ஐ டெளன்லோடு செய்தும் பயன்படுத்தலாம்.

அதே போல் உங்களுக்கு வரும் மெயில்களுக்கு தெளிவாக ஆட்டோ ரிப்ளை வழங்கும் ஆப்ஷனும் இருக்கிறது. Compose AI என்பதை இன்ஸ்டால் செய்து கொண்டால் உங்களுக்கு வந்திருக்கும் மெயிலை படித்து ரிப்ளை வழங்க சில ஆப்ஷன்களை காட்டும். தேவையானவற்றைத் தேர்வுசெய்து, எடிட் செய்து மெயில் செய்து கொள்ளலாம். அல்லது உங்கள் Gmail > Settings>General>Smart Reply>Save Changes என்ற ஆப்ஷனை பயன்படுத்திக்கொள்ளவும்.

இதன் மூலம் மெயிலுக்கு என்ன பதில் அளிக்கலாம் என்று ஆப்ஷன்களை நீங்கள் கேட்டுப் பெற முடியும். அல்லது மெயிலில் கீழ்ப்பகுதியில் பென்சில் வடிவில் இருக்கும் Help me Write என்பதைத் தேர்வு செய்து நீங்கள் அந்த மெயில் சார்ந்து மூன்று வார்த்தைகளை உள்ளீடு செய்தால் போதும், மெயில் அனுப்பியவரின் பெயருடன் ரிப்ளை மெயில் தயார். இந்த ஆப்ஷன் உங்கள் நேரத்தை மிச்சமாக்குவதுடன், உங்களுக்கு கூடுதல் நம்பிக்கையும் தரும்.

தகவல்களை கேட்டுப் பெற...

உங்களுக்கு ஒரு தகவல் தேவைப்படுகிறது எனில் ChatGPT, Claude, Gemini, Perplexity போன்ற ஆப்ஷன்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம். படங்களை உள்ளீடு செய்து அவை சார்ந்த தகவல்களைக் கேட்டுப்பெறும் ஆப்ஷன்களும் இருக்கின்றன. மற்ற ஏஐ டூல்களை விட Perplexity-ல் இருந்து கிடைக்கும் தகவல்கள் இன்னும் துல்லியமாக இருக்கும்.

நீங்கள் ஏர்டெல் பயனாளர்கள் எனில் ஒரு வருடத்துக்கு Perplexity இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், தகவல்களைக் கேட்டுப்பெறுவதில் பிராம்ப்டிங் மிக முக்கியம். நீங்கள் கொடுக்கும் பிராம்ப்டிங் துல்லியமாக இருந்தால் சில நொடிகளிலேயே உங்களுக்கு வேண்டிய தகவல்களை நீங்கள் கேட்டுப் பெற முடியும்.

பிராம்ப்டிங்... இதை ஃபாலோ பண்ணுங்க!

பிராம்ப்டிங் என்பது நமக்குத் தேவையானதைக் கேட்டுப்பெற நாம் கொடுக்கும் கட்டளை, அவ்வளவுதான். கட்டளை சரியாக இல்லை யெனில், நாம் ஒன்று கேட்க, ஏஐ வேறு ஒன்றை பதிலாகத் தரும். பிராம்ப்டிங் செய்யும் திறனை தொடர் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, நீங்கள் உங்களின் ஆறு வயது குழந்தையின் பள்ளி பேச்சுப்போட்டிக்கு தகவல் எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதல் பிராம்ப்டிங் பாரதியாரை பற்றி என்று தேடுவீர்கள்... மிக நீண்ட தகவல்கள் வரும்.

இரண்டாவது, பிராம்ப்டிங் 5 நிமிடங்களுக்குள் பேச வேண்டும் என்று தேடுவீர்கள், சுருக்கமான தகவல் கிடைக்கும்... மூன்றாவது, பிராம்ப்டிங் பேச்சுப் போட்டிக்கு பேசுவதுபோல் முன்னுரை வேண்டும் என்று கொடுப்பீர்கள். முன்னுரை யுடன் ஒரு தகவல் கிடைக்கும்.

நான்காவது, பிராம்ப்டிங் ஆறு வயது குழந்தைக்கு ஏற்றாற்போல் வேண்டும் என்று தேடுவீர்கள். இப்போதுதான் கிட்டத்தட்ட நீங்கள் தேடிய தகவலைப் பெற்றிருப்பீர்கள்.

இதற்கு நான்கு முறை பிராம்ப்டிங் கொடுப்பது நேர விரயம் தான். இதற்கு மாற்றாக பிராம்ப்டிங் செய்வதற்கு முன் என்ன வேண்டும், எப்படி வேண்டும், எந்த மொழியில் வேண்டும், யாருக்கு வேண்டும் என்பதைத் தெளிவாக குறிப்பிட வேண்டும். ‘பாரதியாரை பற்றி, 100 வார்த்தை களில், ஆறு வயது குழந்தைக்கு, தமிழ் பேச்சுப் போட்டிக்கு ஸ்கிரிப்ட் வேண்டும்’ என்று தெளிவாகக் கொடுத்தால் முதல் பிராம்ப் டிங்கிலேயே உங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்துவிடும். நேரமும் மிச்சம்.

மொழி என்பது தடையல்ல!

ஏஐ பயன்படுத்த தொடங்கு பவர்களுக்கு மொழி குறித்த பயம் இருக்கும். அந்த மனத் தடையை உடைக்க வேண்டும். பெரும்பாலான ஏஐ டூல்ஸ் தமிழ் பயன்பாட்டிலும் இருக் கின்றன... தங்கிலீஷ் பயன் பாட்டிலும் இருக்கின்றன. ஆங்கிலம் என்றாலும்கூட நீங்கள் எழுத்துப் பிழை, வாக்கியப் பிழை, இலக்கணப் பிழை என என்ன தவறு செய்திருந்தாலும், நீங்கள் கேட்க வருவதைப் புரிந்து கொண்டு உங்களுக்கு பதில் அளிக்கும். நீங்கள் உள்ளீடு செய்திருக்கும் கேள்வியைத் திருத்தம் செய்து தரச்செய்து கேட்டாலும் செய்து தரும்.

மொழிபெயர்ப்பு செய்ய, பெரும்பாலான மக்கள் Google Translate பயன்படுத்துவார்கள். இப்போது இன்னும் தெளிவாக மொழி பெயர்ப்பு வேண்டுமெனில் Yandex Translate, Google Gemini போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மற்ற வற்றைவிட, Google Gemini சற்று துல்லியமான மொழிபெயர்ப்பு செய்து தருகிறது.

பிசினஸுக்கு கைகொடுக்கும் ஏஐ

ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களுக்கு புகைப்படங்கள், ஹேஷ்டேக், வீடியோ எடிட்டிங் போன்றவை மிக முக்கியம். இதையெல்லாம் கட்டணமே இல்லாமல் ஏஐ ஏஜென்ட் உங்களுக்கு செய்து கொடுக்கும். புகைப்படங்கள் மற்றும் சமூக வலைதள கார்டுகள், வீடியோக்கள் போன்றவற்றை வித்தியாசமாக உருவாக்க Canva, Midjourney போன்றவை கைகொடுக்கும். பிசினஸுக்கு தேவையான சில நிமிட வீடியோக் களை உருவாக்க pixverse சூப்பரான தேர்வு.

புகைப்படங்களை எடிட் செய்ய, பேக்ரவுண்டு மாற்ற, கலர் மாற்ற, படங்களை இன்னும் பெருகேற்ற Pixelcut ஏஐ உங்களுக்கு உதவும். நீங்கள் சமூக வலைத்தளங்களில் ஒன்றை பதிவிடும் முன் ஹேஷ்டேக் தேர்வு அவசியம்.

நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஏஐயிடம் உங்கள் பிசினஸ் வகை, நீங்கள் பதிவிடும் புகைப்படம் சார்ந்து எஸ்.சி.ஓ (Search Channel Optimization) அடிப்படையிலான ஹேஷ் டேக்குகளை கேட்கலாம். அதாவது சமூக வலை தளங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்திய அல்லது டிரெண்டில் இருந்த டேட்டாவின் அடிப்படையில் உங்களுக்கு ஹேஷ்டேக்குகளாக பரிந்துரை செய்யும்.

இவையெல்லாம் உதாரணங்களே..  Ai செய்யும் மேஜிக்குக்கு அளவே இல்லை. ஏஐ கற்றுக்கொண்டால் சமூக மாற்றத்தில் நீங்களும் முதல் ஆளாக நிற்கலாம்.

வழக்கம்போல இதிலும் ஆபத்துகள் இல்லாமல் இல்லை. நீங்கள் பயன்படுத்துவது இலவசமாகக் கிடைக்கும் தளங்கள் என்பதால் உங்களின் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சம்பந்தப் பட்ட தளங்கள் அவற்றை பிற செயல்பாடு களுக்குப் பயன்படுத்தவும் கூடும்.

எனவே, வங்கிக் கணக்குகள், சொந்த விஷயங்கள், பர்சனல் புகைப்படங்கள் என்று உள்ளீடு செய்து, அது தொடர்பான விவரங் களைத் தேடுவதைக் கூடுமான வரை தவிர்க்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் பொதுவான விஷயங்கள் குறித்தே பயன்படுத்திப் பழக வேண்டும். பின்னர் உங்களுக்கு பரிச்சயமாகி விட்டால், எச்சரிக்கையுடன் பயன்படுத்தலாம். ஒருவேளை, உங்கள் தொழில், வேலை, துறைக்கு இந்த Ai பயன்படும், இதன்மூலம் லாபமடைய முடியும் என்று நீங்கள் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டால், பணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையிலான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். அது, பாதுகாப்பான ஒன்றாக இருக்கும்.

- அப்டேட் ஆவோம்...

உணர்வு சார் விடயங்களில் AIயின் ஆலோசனை – சரியா? பிழையா?

 பணி சார்ந்து AI செயலிகளை பயன்படுத்தி வந்த இளம் தலைமுறையினர் தற்போது தங்களின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினைகளுக்கும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஆனால், இது பலனளிக்குமா? அல்லது ஆபத்தில் முடியுமா? மனநலன், உறவுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு AIயின் உதவி பெறுவது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

AIயின் வளர்ச்சிக்குப் பின்னர் பெரும்பாலானோர் தங்கள் அன்றாட வாழ்வில் AIஐ பயன்படுத்தி வருகின்றனர். அதில், உளவியல் தொடர்பான பயன்பாடும் அடங்குகிறது.

பெரும்பாலும் உடனடித் தீர்வைத் தேடியே AI செயலிகளை இளைஞர்கள் நாடுகின்றனர் என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மனநல ஆய்வாளர்கள் கூறும்போது, இளைஞர்கள் பெரும்பாலும், நேர மேலாண்மை, காதல் பிரச்னைகள், வேலையில் கவனக்குறைவு போன்ற காரணங்களுக்காக AIசெயலிகளை பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில் அது உண்மையில் உதவியாகவும் இருக்கும் என்கின்றனர்.

அவ்வாறு AI யின் உதவியை நாட காரணம் என்ன?

உலகம் இணையத்தால் இணைந்திருந்தாலும், தனிமை இன்னும் ஒரு பெரிய பிரச்னையாகவே உள்ளது.

ஆனாலும் இளைஞர்கள் AIயை நாடுவதற்கு காரணம் தனிமை மட்டும் அல்ல.

அது உடனடியாக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. அதனால் AIயை பயன்படுத்துபவர்கள் அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

இங்கு கட்டணமும் ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. நாம் ஏதேனும் ஒருவிடயத்தினை தெரிந்துகொள்ளவோ, அல்லது நமது பிரச்சினைக்கு உளவள ஆலோசனை பெறவோ துறை சார்ந்தவர்களை அணுகுவதற்கு கட்டணம் தேவைப்படுகிறது. ஆனால் AIயிடம் ஆலோசனை பெற கட்டணம் தேவையில்லை.

ஆறுதலாக பேசுவது, நாம் செய்வதை சரி என கூறுவது நமக்கு எப்போதும் பிடித்தமானதாக இருக்கும் அல்லவா? பெரும்பாலனவர்கள் AIயை நாடுவதற்கும் இது ஒரு காரணமாக உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

AIசெயலிகள் எப்போதும் உங்கள் உணர்ச்சிகளை சரி என்றே கூறும். ஆனால் மனநல ஆலோசகர் உங்களது சிந்தனைகளை சவாலுக்குள்ளாக்கி, புதிய கோணத்தில் அணுக கற்றுக் கொடுப்பர்.

எனவே உணர்வு சார்ந்த விடயங்களிலோ, மனநலன், உறவுகள் சார்ந்த விடயங்களிலோ AIயின் ஆலோசனை பெறுவது பொருத்தமானதாக அமையாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


ஆலயதரிசனம்

 ஒரு பழமொழி ஒன்று உண்டு. குதிரைக்கு தண்ணீர்தான் வைக்க முடியும். அதை குடிக்க வைக்க முடியாது. குடிக்கும் வேலையை குதிரை தான் செய்ய வேண்டும்.வெறுமனே கோவிலுக்கு போனோமா, சாமியை கும்பிட்டோமா, பிரசாதத்தை வாங்கினோமானு வந்துட கூடாது. சிவன், கோவிலாக இருந்தாலும், விஷ்ணு கோவிலாக இருந்தாலும், எந்த கோவிலாக வேண்டுமானாலும், எந்த வழிபாட்டு ஸ்தலமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சிறிது நேரம் அமர்ந்து மனத்தை ஒருமுகபபடுத்த பழக வேண்டும்.ஆலயங்கள் என்பது பல ஞானிகளின் காலடி பட்ட இடம். அதற்க்கே ஒரு தனி சக்தி உண்டு. கோவிலுக்கு நல்லவர்கள் அதிகம் வருவார்கள். நாம் ஆலயத்தில் அமர்ந்து மனத்தை ஒருமுகபபடுத்த முயற்சிக்கும் பொழுது, பலரின் நல்ல எண்ண அலைகள் நமது மனதிலே ஊடுருவும்.சிலர் நமக்கு எந்த கெடுதலும் செய்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலேயே மனத்தில் வெறுப்பு வரும். காரணம், அந்த மனிதரின் என்ன அலைகள் உங்களை அவ்வாறு வெறுப்படைய செய்கிறது.மிக பிரசித்தி பெற்ற சில ஆலயங்களுக்கு செல்லும் பொழுது நம்மை அறியாமலேயே மனம் சற்று அமைதி பெறும். அடுத்த சில நிமிடங்களில் விவேக் காமெடீ போல், புதிதாக வாங்கிய செருப்பில் இருந்து ஆரம்பித்து, வீட்டில் ஊசி போன பருப்பு வரை, பொறுப்பே இல்லாமல் நமது மனம் எதை, எதையோ நினைக்கிறது. மனம் ஒரு குரங்கு என்பார்கள் சிலர், மனம் குதிரையை விட வேகமாக ஓட கூடியது என்பார்கள் சிலர். மனத்தை விட வேகமாக ஓட கூடிய ஒரு ராக்கேட்டை இதுவரை எந்த நாட்டு விஞ்ஞானியும் கண்டு பிடிக்கவில்லை. இனிமேலும் கண்டு பிடிக்க முடியாது. ஒலியின், ஒளியின் வேகத்தை விட மனோவேகம் அதீத வேகம் வாய்ந்தது.மனம் ஒரு சிறந்த வேலைக்காரன். ஆனால்? மோசமான எஜமானன். நீங்கள் வண்டி ஒட்டும் பொழுது உங்கள் கட்டுப்பாட்டில் நீங்கள் ஒட்டும் வண்டி இருக்க வேண்டும். வண்டி கட்டுப்பாட்டில் நீங்கள் இருந்தால். மனத்தை போல் அதீத வேகத்தில் இயங்க கூடிய வாகனம் அகில உலகங்களில் எங்குமே இல்லை. அதை மனித சக்தியால் கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று. உங்கள் மனத்தை இறைவனோடு இரண்டற நீங்கள் கலந்தால் அடுத்த நொடியே உங்கள் மனம் இறைவன் கட்டுப்பாட்டில் வந்து விடும். உங்கள் மனத்தை கட்டுப்படுத்தும் சாரதி இறைவனே.நீங்கள் ஆலயத்திற்குள் இருக்கும் பொழுது உங்களுக்கு தேவையற்ற எண்ணங்கள் வந்தால், நீங்க்ள் அந்த எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். தேவையில்லாத ஃபோன் கால் வந்தால் அதை அட்டர்ன் பண்ணாமலேயே கட் பண்ற மாதிரி, தேவையில்லாத எண்ணங்களை கட் பண்ணுங்க. உங்கள் மனத்தில் கடவுளின் உருவத்தை மட்டுமே நினையுங்கள். எந்த கடவுள் உங்களின் இஷ்ட தெய்வமோ அந்த கடவுளின் உருவத்தை உங்கள் மனக்கண் மூலம் கொண்டு வந்து தியானம் செய்யுங்கள்.ஆலயம் என்பது ஆனந்த பிரவாகம் சுரக்கும் இடம். அங்கு நீங்கள் மனத்தை ஒருமுகபபடுத்த முயன்றால் மற்ற இடங்களில் நீங்கள் தியானம் பழகுவதற்கும், ஆலயங்களில் தியானம் பழகுவதற்கும் உள்ள வித்யாசத்தை உணரலாம். அதிலும் முதன் முறையாக தியானம் பழகுபவர்கள் ஆலயத்தில் தியானிக்கும் பொழுது, உங்கள் ஆன்மா எளிதாக லயப்படும், வயப்படும், புரியாத பல ஆழ்மன சூட்சுமங்கள் புலப்படும். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆத்மார்த்தமாக நீங்களாகவே உணர்ந்தால் தான் உண்டு.நம்முடைய ஆன்மா லயப்படும் இடமே ஆலயம். அதிலும் பல நூறு ஆண்டுகளாக பூஜை நடக்கும், மிக புராதனமான ஆலயங்களில் நாம் அதிக, அதீத, தெய்வீக அதிர்வலையை உணரலாம்.

வாழ்க வளமுடன்...


முஸ்லிம்கள் ஏன் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை தெரியுமா?

 நீங்கள் ஏன் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை என்று ஒரு முஸ்லீமிடம் ஒரு ஜெர்மனியர் கேட்டார்.

மதம் சார்ந்தது அல்லாமல் அறிவியல் சார்ந்த ஒரு காரணத்தைக் கூறுங்கள், உங்களுடைய பதில் உறுதியானதாக இருக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டார்!

'எனக்கு ஒரு மணி நேரம் கொடுங்கள், நான் உங்களுக்கு ஜெர்மன் மொழியில் பதிலைத் தருகிறேன், அதற்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக விளக்குகிறேன், இறைவன் நாடினால் என்று முஸ்லிம் நண்பர் கூறினார்.

பின்னர் அந்த இஸ்லாமிய நண்பர் இணையத்தில் தேடத் தொடங்கினார், பல ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் சர்வதேச அறிவியல் பக்கங்களை உலாவினார்.

ஓரளவிற்கு, அவர் ஒரு ஜெர்மன் தளத்தில் கிடைத்த அறிக்கையால் அதிர்ச்சியடைந்தார்.

இந்த ஆதாரம் ஜெர்மன் உணவு தர ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் அறிக்கை பன்றி இறைச்சியைப் பற்றிய பல உண்மைகளை எழுதுகிறது:

பன்றி இறந்த சடலத்தை, அது எந்த பிராணியாக, சிதைந்திருந்தாலும், அது தனது தந்தையாக இருந்தாலும், அதைத் தின்னும்.

பன்றி கிட்டத்தட்ட எல்லாவற்றையும் சாப்பிடுகிறது: அது சிறுநீரையும் அதன் சொந்த சிறுநீரையும் கூட குடிக்கிறது, மற்ற விலங்குகளின் எச்சங்களையும் உண்ணும்., அழுக்கு படிந்து ஈரமாக இருந்தாலும், செத்து வீங்கிய உடலாக இருப்பினும் அது சாப்பிடும், பச்சை மற்றும் அழுகிய தாவரங்களையும் சாப்பிடும்.

ஆட்டுக்குட்டியை விட பன்றியின் உடலில் அதிக நச்சுகள் உள்ளன.

பன்றிக்கு வியர்க்கவே வியர்க்காது, ஏனென்றால் அதன் தோல் ஒரு பஞ்சு போன்றது, அது அனைத்து அழுக்குகளையும் உறிஞ்சிவிடும், மேலும் இது ஒரு பேரழிவு.

நீங்கள் ஆட்டிறைச்சியை உண்ணும்போது, ​​​​உங்கள் உடல் அதை ஜீரணிக்க 6 முதல் 9 மணி நேரம் ஆகும், இதில் கல்லீரல் ஒரு பெரிய நேரத்தில் மிகக் குறைந்த அளவு நச்சுகளை உறிஞ்சுகிறது, அதே நேரத்தில் பன்றி இறைச்சி ஜீரணமாக ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஆகும், இந்த நேரத்தில் உங்கள் கல்லீரல் நச்சுக்களில் நனைந்து மூடப்பட்டிருக்கும்..

* பன்றி எல்லா விலங்கினத்தையும் புணரும். தன் இன ஆணாக இருந்தாலும் உறவு கொள்ளும் நோய்களை சுமந்து செல்வதற்கு இது ஒரு பெரிய காரணம்.

பன்றியைக் கொன்று 3 மணி நேரம் கழித்துத்தான் அதன் உடலில் இருந்து சில கிருமிகள் வெளியேறும்.

பன்றியின் உடலில் சமைத்தாலும், கிரில் செய்தாலும் இறக்காத கிருமிகள் உள்ளன.

பன்றி இறைச்சி சமைக்க 6 மணி நேரத்திற்கும் மேலாகிறது, மேலும் இது வறுக்கவும் ஏற்றது அல்ல.

* பன்றியின் தலையில் அதிக அளவு ரத்தம் உறைந்துள்ளது, தலையை உயர்த்தாத ஒரே உயிரினம் இது..

* பன்றி தன் உணவை உண்பதற்கு முன் நுகராது, மாறாக அது சுத்தமாக இருந்தாலும் சாப்பிடும் போது தன் மூக்கிலிருந்து சளியை உணவின்மீது உமிழ்ந்துவிட்டு, பிறகு அதை உண்ணும்.

நமது நண்பர் அந்த அறிக்கையை படித்து முடித்ததும் அந்த ஜெர்மானியருக்கு அனுப்பி வைத்தார், ஜெர்மானியர் படித்ததும் பன்றி சாப்பிடுவதை உடனடியாக தவிர்த்தார்.மாறாக அனைத்து ஜெர்மன் பக்கங்களிலும் “Why Muslims Don’t eat pork" என்ற தலைப்பில் அந்த அறிக்கையை வெளியிட்டார்.

முஸ்லீம்களாகிய எங்களைப் பொறுத்தமட்டில், இறைவனுக்கே புகழனைத்தும், குரான் வாசகம் போதும்..இது எல்லாம் வல்ல இறைவனின் கூற்று (இறந்த உடல், இரத்தம், பன்றி இறைச்சி உங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது(அல்குர் ஆன்).


ஆலயதரிசனம்

 

வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம்,

முக்கியமான கோயிலுக்கு போயிட்டு வாங்க!

இளமை சீக்கிரம் போய்விடும்.

முதுமை சீக்கிரம் போகாது.

ஆசைப்பட்டாலும் கோயிலைப் பார்க்க முடியாது.

சொத்து சுகம் இருந்தாலும் சொந்த பந்தம் இருந்தாலும் முதுமையான காலத்துல யாரும் கோயிலுக்கு கூட்டிகிட்டு போக மாட்டாங்க.கடைசி காலத்தில் உயிர் இழுத்துகிட்டு சாவுற நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

யாராக இருந்தாலும் முதுமை கால வாழ்க்கை மிகவும் மோசமானது.கடைசி காலத்துல கட்டில்ல படுத்துகிட்டு பிள்ளைகளுக்கு சிரமத்தை கொடுக்கிற வாழ்க்கை நமக்கு வேண்டாம்.இளமையில் சாப்பிட்ட அத்தனையும் முதுமையில் சாப்பிட தோணும்.பணிவிடை செய்வதற்கு இன்று யாரும் தயாராக இல்லை.அசிங்கமா போயிடும் நம்ம நாற்றம் பிடித்த உடம்பை வைத்துக்கொண்டு மிகவும் கொடுமையான சித்திரவதையை அனுபவிக்க வேண்டும் இறுதி காலத்தில்.சிவசிவ என்று சொன்னாலே உயிர் போய் விட வேண்டும் சிவபெருமான் திருவடிக்கு .சேர்த்து வைத்த சொத்து சுகமெல்லாம் ஒரு பைசாவுக்கு உதவாது. உன்னுடைய பிள்ளைகளும் உனக்கு உதவ மாட்டார்கள். இளமை காலங்களில் சிவபெருமானை நேசி அவர் எதிர்காலத்தில் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார். இளமை காலம் முழுவதும் சிவபெருமான் திருவடியைத் கோயில் கோயிலாக தேடிச் சென்றால், இறுதி காலம் முழுவதும் சிவபெருமான் துணை இருப்பார்.

நமசிவாய வாழ்க.....

திருச்சிற்றம்பலம்.....