/* ===== Custom Header + Mobile Responsive for Watermark ===== */ #header-inner { text-align: center !important; padding: 10px 0 !important; } #header h1, #header h1 a { font-size: 32px !important; color: #004080 !important; text-decoration: none !important; font-weight: bold !important; } #header .description { font-size: 16px !important; color: #333333 !important; font-style: italic !important; } /* Mobile view */ @media only screen and (max-width: 600px) { #header h1, #header h1 a { font-size: 22px !important; } #header .description { font-size: 14px !important; } .post { background: #ffffff !important; margin: 10px 5px !important; padding: 10px !important; border-radius: 8px !important; } img { max-width: 100% !important; height: auto !important; } }

Friday, 17 October 2025

மருத்துவ குணம் கொண்ட அதிமதுரம்.

 

🫚அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.
சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.
அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது
புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.
பொதுவாக அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக். அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.
தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.
வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை ‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்

Tuesday, 14 October 2025

திருக்கோணமலை – வரலாறும் சிறப்பும்

 

🕉️ திருக்கோணமலையின் வரலாறும் இராவணன் வெட்டின் அதிசயமும்

📍இடம் மற்றும் இயற்கை அமைப்பு

திருக்கோணமலை இலங்கையின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கியமான துறைமுக நகரம்.
இயற்கை அழகு, கடல் வளம், பண்டைய வரலாறு, ஆன்மீகம் – இவற்றை எல்லாம் ஒன்றாகக் கொண்டுள்ள புனித தலம் இதுவாகும்.
“திரு + கோணம் + மலை” என்ற சொல்லிலிருந்து வந்த பெயர் இதன் புனிதத்தையும் அமைப்பையும் விளக்குகிறது.


🕉️ கோணேஸ்வரர் ஆலயத்தின் தெய்வீக வரலாறு

திருக்கோணமலையின் புகழ் பெரும்பாலும் கோணேஸ்வரர் சிவன் ஆலயம் காரணமாகவே உலகம் அறிந்தது.
இந்த ஆலயம் இலங்கையின் மிகப் பழமையான சிவாலயங்களில் ஒன்று;
சிவபெருமான் இங்கு “கோணேஸ்வரர்” எனவும், அம்பாள் “மாதுமை அம்பாள்” எனவும் வழிபடப்படுகிறார்.

இது இலங்கையின் ஐந்து ஈஸ்வரத் தலங்களில் (Panch Eswaram) ஒன்றாகும்.
மற்ற நான்கு தலங்கள்:

  • நகுலேஸ்வரம் (கேசபே)

  • கேதீஸ்வரம் (மன்னார்)

  • முன்னேஸ்வரம் (புத்தளம்)

  • தேவேஸ்வரம் (தேவுந்தரா)


⚔️ இராவணன் வெட்டு – புராணக் கதை பேசும் பாறை

கோணேஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் கடலை நோக்கி ஒரு உயர்ந்த பாறை உள்ளது; அதையே இராவணன் வெட்டு (Ravana’s Cut) என அழைக்கின்றனர்.

புராணக் கதைகளின்படி, இராவணன் சிவபெருமானின் தீவிர பக்தர்.
அவர் இந்த திருக்கோணமலை மலைப்பகுதியைத் தன் இராச்யத்துக்குக் கொண்டு செல்ல முயன்றபோது, சிவபெருமான் அதைத் தடுத்ததாக கூறப்படுகிறது.
அதனால் இராவணன் கோபத்தில் தனது வாளால் அந்தப் பாறையை வெட்டினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வெட்டின் சுவடுகள் இன்றும் அந்த பாறையில் தெளிவாகக் காணப்படுகின்றன.

அந்த இடம் கடலை நேரடியாக நோக்கியுள்ளதால், அங்கிருந்து பார்க்கும் கடல்காட்சி மிக அற்புதமானது.
இது இயற்கை அழகும், புராண நம்பிக்கையும் இணைந்த ஒரு மாயமான இடமாக விளங்குகிறது.


🏰 வரலாற்று முக்கியத்துவம்

திருக்கோணமலை பல நூற்றாண்டுகளாகவே ஒரு முக்கிய வணிக மற்றும் கடற்படை தளம்.
சோழர், பாண்டியர், தமிழரசர்கள் இந்தியா–இலங்கை வணிகம் மேற்கொள்ள இதை பயன்படுத்தினர்.
பின்னர் போர்த்துகீசர், டச்சு, ஆங்கிலேயர் ஆகியோர் தங்கள் ஆட்சிக்காலங்களில் இதனை கடல்சார் தளமாக வைத்தனர்.

1622ஆம் ஆண்டு போர்த்துகீசர் கோணேஸ்வரர் ஆலயத்தை இடித்தனர்.
அதில் இருந்த சிலைகள் கடலில் வீசப்பட்டன.
பின்னர் அவை மீண்டும் கண்டெடுக்கப்பட்டு இன்றைய ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ளன.


🌊 கடலும் இயற்கையும்

திருக்கோணமலை கடற்கரை இலங்கையின் அழகிய கடற்கரைகளில் ஒன்று.
வெண்மணல், நீல கடல், பாறைகள், பவளப்பாறைகள் – இவை அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து கடலை நோக்கி பார்க்கும் அனுபவம் மனதை அமைதிப்படுத்தும்.

அங்கு உள்ள “லவேர்ஸ் லீப் (Lovers Leap)” என்ற பாறை,
பழமையான காதல் வரலாற்றைச் சொல்லும் இடமாகவும் புகழ்பெற்றது.


🕊️ பலமத கலாச்சாரம்

திருக்கோணமாலை நகரம் பலமதங்களும் பல இனங்களும் இணைந்த ஒற்றுமையின் நகரம்.
இங்கு இந்துக்கள், புத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் வாழ்கின்றனர்.
தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் பரவலாகப் பேசப்படுகின்றன.


🌺 இன்றைய திருக்கோணமலை

இன்றைய திருக்கோணமலை ஒரு சுற்றுலா மையம், கல்வி மையம் மற்றும் ஆன்மீகத் தலம் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்த நகரம்.
பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடற்கரை, ஆலயம், இராவணன் வெட்டு, கடல்சுற்றுப்பயணம் போன்றவற்றிற்காக வருகிறார்கள்.


🕉️ முடிவு

திருக்கோணமலை — வரலாறும் புராணமும் கலந்து நிற்கும் புனித நிலம்.
கோணேஸ்வரர் ஆலய மணி ஒலியும், கடலின் அலை சத்தமும் இணைந்து மனதில் அமைதியை உருவாக்குகின்றன.
அங்கு நிற்கும் இராவணன் வெட்டு பாறை, அந்தப் பகுதியின் தெய்வீகமும் வரலாற்றுப் பெருமையும் வெளிப்படுத்தும் சான்றாக இன்று வரை நிற்கிறது.

Monday, 13 October 2025

நெதர்லாந்து



மக்கள் தொகையைவிட சைக்கிள்கள் அதிகம் இருக்கும் நாடு . 
ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதியில் பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளை ஒட்டி அமைந்துள்ள நாடு நெதர்லாந்து. இந்த நாட்டு மக்களின் பிரதான மொழி டச்சு. ஆம்ஸ்டர்டாம், ரோட்டர்டாம், தி ஹேக் (இதனை டச்சு மொழியில் டென் ஹாக் என்கிறார்கள்) ஆகியவை இந்த நாட்டின் முக்கியமான நகரங்கள். நாட்டின் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம். இது ஒரு பெரிய துறைமுக நகரம். ரோட்டர்டாம் ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம். நாட்டின் பாராளுமன்றம் இருப்பது தி ஹேக் நகரத்தில். ஆம்ஸ்டர்டாம் நகரத்துக்கு வயது 750. இந்த ஆண்டு அக்டோபரில் இதனைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறது ஆம்ஸ்டர்டாம் நகரம்.
பல நூற்றாண்டுக் கால வரலாறு கொண்ட இந்த நகரத்துக்கு ஆம்ஸ்டர்டாம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? இந்த நகரத்தின் வழியாக ஆறு ஒன்று ஓடுகிறது. அதன் பெயர் ஆம்ஸ்டெல். அந்த ஆற்றின் மீது 1270-ல் அணையைக் கட்டினார்கள். அதாவது, ஆம்ஸ்டெல் ஆற்றின் மீது கட்டப்பட்ட டேம். அதுதான் ஆம்ஸ்டர்டாம். நகரின் டூரிஸ்ட் கைடுகள் எல்லோரும் இந்தத் தகவல் சுற்றுலாப் பயணிகளுக்குச் சொல்கிறார்கள். ஆனாலும், அதற்கு முன்பே ஆம்ஸ்டெல் ஆற்றை ஒட்டி மக்கள் வசித்த பகுதி இதே பெயரில்தான் அழைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஆக, பதின்மூன்றாம் நூற்றாண்டில் மீனவ கிராமமாக இருந்த இடம்தான் இன்று நாம் காணும் ஆம்ஸ்டர்டாம் என்ற சர்வதேசப் பெருநகரமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
இங்கே, 170 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். ஆண்டுக்கு 1.14 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். இவர்களில் 45 லட்சம் பேர் மட்டுமே உள்நாட்டு டச்சு டூரிஸ்ட்டுகள். மீதி 95 லட்சம் பேர் அயல்நாட்டுச் சுற்றுலாப்பயணிகள். இது ஆம்ஸ்டர்டாமின் மக்கள் தொகையைவிட பல மடங்கு அதிகம்.
ஆம்ஸ்டர்டாமில் வீடுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. அந்தக் காலத்துத் திருவல்லிக்கேணி வீடுகள் போல வீடுகளின் சுவர்கள் ஒன்றோடொன்று ஒட்டியே இருக்கும். அதைவிட சுவாரசியமான விஷயம், வீடுகளின் நுழைவுப் பகுதி மிகவும் குறுகலாகவும், உள்ளே மிக
நீ...ள...மாகவும் போய்க்கொண்டே இருக்கும். அதற்கும் ஒரு பின்னணி உண்டு. அந்தக் காலத்தில் ஒரு வீட்டின் முன்பகுதி எவ்வளவு அகலம் என்பதை வைத்துதான் வீடுகளுக்கு வரி வசூல் செய்யப்பட்டதாம். எனவே, முகப்பு குறுகியதாகவும், உட்புறம் நீண்டும் இருக்கும்படி வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், எல்லா வீடுகளும் மூன்று, நான்கு மாடிகள் வரை கட்டப்பட்டுள்ளன. உபரியாக பேஸ்மென்ட்டும் உண்டு. வீடுகள் அகலக் குறைவு என்பதால், மாடிப்படிகளுக்கு இடப்பற்றாக்குறை. எனவே, பெரும்பாலும் ஸ்பைரல் படிகள்தான்.
ஆம்ஸ்டர்டாமை `மியூசியங்களின் சொர்க்கம்' என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தெருவுக்குத் தெரு மியூசியங்கள். சின்ன வயசில் பத்திரிகைகளில் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்று படித்திருக்கிறோம் இல்லையா? அந்த ரிப்ளியின் `நம்பினால் நம்புங்கள்' சமாச்சாரங்களைக் கொண்ட ஒரு மியூசியமும் இங்கு உள்ளது. புகழ்பெற்ற மேடம் டூசாத் மெழுகுச் சிலை மியூசியமும் உள்ளது. வான் கா, ராம்பிராண்டு போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுக்கென்றே பிரமாண்டமான மியூசியங்களும் இருக்கின்றன. அங்கே இந்த ஓவியர்களின் பல ஒரிஜினல் ஓவியங்கள் பார்வைக்கு உள்ளன. இவற்றைத் தவிர, சயின்ஸ் மியூசியம், டங்கன் என்று பண்டைய கொடூரங்கள் உள்ளிட்ட பயங்கரங்கள் மூலம் ஆளை மிரட்டும் மியூசியம், படகு வீடு மியூசியம், யூத வரலாற்று மியூசியம், பழைமையான ரைக்ஸ் மியூசியம், பைபிள் மியூசியம், கம்ப்யூட்டர் மியூசியம், டயமண்ட் மியூசியம், திரைப்பட மியூசியம், புகைப்பட மியூசியம், கால்வாய்கள் மியூசியம், காஸ்ட்யூம் மியூசியம், மரண மியூசியம், துலீப் மலர் மியூசியம், ஆன் ஃப்ரங்க் இல்லம் என்று ஏகப்பட்ட மியூசியங்கள். அவ்வளவு ஏன்? போர்னோகிராபி, எரோடிகா போன்ற சமாச்சாரங்கள் அடங்கிய ஒரு செக்ஸ் மியூசியம், ஆம்ஸ்டர்டாமில் பிரசித்தி பெற்ற பாலியல் தொழில் குறித்த மியூசியம்கூட இங்கு உண்டு.
இன்னொரு முக்கியமான விஷயம். ஆம்ஸ்டர்டாமில் மைல்டு ரக போதை வஸ்துகளுக்கு அனுமதி உண்டு. காபி ஷாப்களிலேயே அவற்றை எளிதாக வாங்கலாம். அதேபோல, சிவப்பு விளக்குப் பகுதியும் உண்டு. அங்கே பகலிலும், அதைவிட ஜரூராக இரவிலும் சட்டபூர்வமாக பாலியல் தொழில் நடக்கிறது. பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளையும் நகர நிர்வாகம் வகுத்திருக்கிறது.
நடந்தே நகரத்தைச் சுற்றிக் காட்டும் வாக்கிங் டூரின்போது டூர் கைடு என்னிடம் ஒரு தகவலைச் சொன்னார். ``ஆம்ஸ்டர்டாம் நகரின் நெரிசல் மிகுந்த மூன்று முக்கிய ஏரியாக்களில் இப்போது சிவப்பு விளக்குப் பகுதிகள் இயங்கிவருகின்றன. இவற்றை நகருக்கு வெளியில் ஒரே இடத்தில் இடம் மாற்றப் போவதாக தற்போதைய நகர மேயர் சொல்லியிருக்கிறார். அதற்கு பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.”

ஆம்ஸ்டர்டாம் நகரத்து மத்திய ரயில் நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் உள்ளது டாம் ஸ்கொயர் என்ற இடம். நகரின் மிக முக்கியமான இடம் இதுதான். டாம் ஸ்கொயரை ஒட்டி ஒரு பெரிய கட்டடம், அதனை ராயல் பேலஸ் என்று அழைக்கிறார்கள். ஆனால், அங்கே ராஜ குடும்பத்தினர் யாரும் இப்போது வசிக்கவில்லை. அரசாங்கத்தின் சில முக்கியக் கூட்டங்கள் அங்கே நடக்குமாம். நெப்போலியன் ஹாலந்தைக் கைப்பற்றியதும், இந்தப் பகுதியை ஆள்வதற்குத் தன் தம்பி லூயிஸ் போனபார்ட்டை அனுப்பி வைத்தாராம். அந்த லூயிஸ் இந்த அரண்மனையில் தங்கியதால், அதற்கு ராயல் பேலஸ் என்று பெயர் வந்தது.
இந்த டாம் ஸ்கொயரிலேயே பார்த்து ரசிக்க நிறைய உண்டு. சில இசைக்கலைஞர்கள் மெய் மறந்து ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருப்பார்கள். எதிரே ஒரு தொப்பி வைக்கப்பட்டிருக்கும். சிறிது நேரம் இசையைக் கேட்டு ரசித்துவிட்டு, தொப்பியில் கொஞ்சம் சில்லறைகள் போட்டுவிட்டுப் போகிறார்கள் பார்வையாளர்கள். பக்கத்திலேயே ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாகசம் பண்ணுவார் இன்னொருவர். அருகிலேயே குழந்தைகள் தரையில் உட்கார்ந்துகொண்டு பொம்மலாட்டம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைகள் குதூகலமாக பொம்மலாட்டத்தை ரசிக்க, அந்த நிகழ்ச்சி முடியும் வரை பெற்றோர்கள் பொறுமையோடு அங்கே காத்திருப்பார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன், குழந்தைகளுக்கு சோகம்; பெற்றோர்கள் முகத்தில் மலர்ச்சி!
இதைவிட சுவாரசியமான ஒரு விஷயம், வேஷம் கட்டிய மனிதர்கள். காலை முதல் மாலை வரை ஏதாவது ஒரு வேஷம் போட்டுக் கொண்டு, ஒரே இடத்தில் அசையாமல் நின்றுகொண்டிருப்பார்கள். இவர்களில்தான் எத்தனை ரகம்! டிராகுலா போல, எலும்புக்கூடு போல, மகாராணி போல, சிக்கனமாக உள்ளாடைகள் அணிந்துகொண்டு, உடம்பு முழுக்க பல வண்ணப் பெயின்ட்கள் பூசிக்கொண்டு நிற்பவர்களையும்கூடக் காணலாம். சுற்றுலாப்பயணிகள் அவர்களோடு சேர்ந்து நின்றுகொண்டு போட்டோ எடுத்துக் கொள்வார்கள். சும்மா இல்லை, அவர்களுக்குக் காசு கொடுக்க வேண்டும்.
அங்கே எந்த நேரமும் ஜனங்களையும், புறாக்களையும் ஒருசேரக் காணலாம். புறாக்கூட்டத்துக்கு மத்தியில் கைகள் மேல், தோளில், தலையில் புறாக்கள் உட்கார்ந்திருக்க போட்டோ எடுத்துக்கொள்வது இங்கே மிகப் பிரபலம். இரண்டு பேர் கையில் ஒரு பையுடன் நிற்கிறார்கள். பையில் அரிசி. ஒரு கை அரிசியை உங்கள் கையில் கொடுத்ததும், அதைப் புறாக்களுக்கு நீங்கள் போடும்போது அவை உங்களை நெருங்கி, உங்கள் கையில், தலையில், தோளில் ஜம்மென்று உட்கார்ந்துகொள்ளும். அப்படியே கிளிக்கிக் கொள்ள வேண்டியதுதான். அரிசிக்காரருக்கு இஷ்டம் போல டிப்ஸ் கொடுத்துவிட்டு நகரலாம். அரிசியை உச்சந்தலையில் தூவிக்கொண்டு புறாக்களைத் தலைக்கே வரவழைத்து போட்டோ எடுத்துக் கொள்பவர்களும் உண்டு.
டாம்ஸ்கொயர் ஒரு பொழுதுபோக்குக் களம் மட்டுமல்ல, ஒரு போராட்டக் களமும் கூட! சனி ஞாயிறு என்றால், சிலர் குழுக்களாக வந்து பேனர்கள் வைத்து, தங்கள் பிரச்னைகள் பற்றி விளக்குவார்கள். துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பார்கள். நான் ஒரு சீனக் குழுவினரை சந்தித்தேன். சீனாவில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்வது கனஜோராக நடந்து கொண்டிருக்கிறதாம். சீனர்கள் குழு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் டாம்ஸ்கொயரில் கூடி, இது பற்றிய துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து, மனித உறுப்பு விற்பனைக்கு எதிராகக் கையெழுத்து பெறுகிறார்கள். இன்னொரு பக்கம், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் தங்கள் பிரச்னைக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். அங்கே பார்த்தால் கடுமையான அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்புப் பிரசார பேனர்கள்; அதற்கு சற்றுத் தள்ளி சில யூதர்கள் `தீவிரவாதத்தை முறியடிப்போம்' என்று பாலஸ்தீன தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பிரசாரங்களும் டாம்ஸ்கொயரில் ஒரே இடத்தில் நடக்கின்றன.
ஒரு குழுவினரிடம், “இங்கே யாரும் தம் இஷ்டப்படி போராட்டம், பிரசாரம் செய்யலாமா?'' என்று கேட்டேன். “நாங்கள் முறைப்படி அரசாங்க அனுமதி பெற்றிருக்கிறோம்'' என்றார் அவர். வாழ்க ஜனநாயகம்! வாழ்க பேச்சுரிமை!

Sunday, 12 October 2025

Old is Gold

நிலவே என்னிடம் நெருங்காதே 

ஒருநாள் இரவு பகல் போல் நிலவு         படம்  காவிய தலைவி 

மன்னவனே அழலாமா                               படம்   கற்பகம் 

நினைக்க தெரிந்த மனமே                       படம்   ஆனந்தஜோதி 

நாளை இந்த வேளை                                    படம்    உயர்ந்த மனிதன் 

கண்ணா கருமை நிற கண்ணா            படம்   நானும் ஒரு பெண்  

 ஆயிரம் பெண்மை                                       படம்  வாழ்க்கைப்படகு

கண்கள் எங்கே                                               படம்    கர்ணன்

கொஞ்சி கொஞ்சி பேசி                              படம்  கைதி கண்ணாயிரம்)

சந்திப்போமா இனி சந்திப்போமா        படம்       சித்தி

பார்த்த ஞாபகம் இல்லையோ                 படம்  புதிய பறவை 

காதோடுதன் நான் பாடுவேன்                 படம் 

சிரித்தாலும் அழுதாலும் நிலை              படம்    களத்தூர் கண்ணம்மா

வருந்தாதே மனமே வீணே                         படம்  போட்டர்  கந்தன்

Sunday, 5 October 2025

எனக்கு பிடித்த பாடல்கள்

 நானாக நானில்லை தாயே.                    படம் சகலகலாவல்லவன் 

முன்பனியா முதல்மழையா                    படம் நந்தா 

பாடு நிலாவே                                                   படம் உதயகீதம் 

பூங்காற்றிலே உன்சுவாசத்தை              படம் உயிரே 

ஆயிரம் மலர்களே மலருங்கள்               படம்  நிறம் மாறாத பூக்கள் 

அகரம் இப்போ சிகரம் ஆச்சு                  படம்  சிகரம்

நீ கவிதைகளா                                                 படம்   மரகத நாணயம் 

எனக்கு பிடித்த பாடல் அது                       படம்   ஜூலி கணபதி 

பூக்கள் பூக்கும் தருணம்                             படம்   மதராசபட்டினம் 

உயிரே உயிரே வந்து                                    படம்    பம்பாய் 

ஆருயிரே ஆருயிரே                                    படம்   மதராசபட்டினம் 

விக்ரம் விக்ரம் விக்ரம்                                  படம்   விக்ரம்